மாதவிடாய் பிரச்சனைகள் தீர (Periods Problem)

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் தீர இதை கடைபிடித்தாலே போதும்.

         தலை முடி :  இன்றைய பெண்கள் தலை  முடியை விதவிதமாக  வாரிக்கொள்கிறார்கள். மூக்குக்கு நேராக நடு நெற்றி வழியாக தலையில் வகுடு எடுத்து சீவ வேண்டும். அப்படி செய்வதால் நம் கர்ப்பப்பையின் இயக்கம் சீராக இருக்கும்.
    

         தூங்கும் முறை :  சில பெண்கள் தூங்கும் போது கால்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து பின்னிக்கொண்டு தூங்குவார்கள். அப்படி பின்னிக்கொண்டு தூங்குவதால் கர்ப்பப்பை சுருங்குகிறது. இடது பக்கம் ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் அதிக வயிற்று வலி காரணமாக பெண்கள் குப்புறப்படுத்து தூங்குவார்கள். கண்டிப்பாக குப்புறப்படுத்து தூங்க கூடாது.

        மாத்திரை : அய்யய்யோ! நல்ல நாளில் தீட்டு வந்துட போகுது. அதனால் மாதவிடாய் தள்ளி போவதற்கோ அல்லது முன்கூட்டியே வருவதற்கோ சில பெண்கள் மாத்திரையை உட்கொள்வதை வழக்கமாகிவிட்டார்கள். ரத்தம் வெளியேறுவதை தீட்டு என்று சொன்னால், நாம் ஒவ்வொருவரும் தீட்டோடு பிறந்தவர்கள் தான்.  எந்த நாளாக இருந்தாலும் சரி. அசுத்த ரத்தம் வெளியேறுவது தான் மாதவிடாய். இது இயற்கையான ஒன்று என்று புரிந்துக்கொண்டு இது போன்ற மாத்திரைகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. 

         உட்காரும் முறை : ஒரு பெண் நீ . உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா கால் மேல் கால் போட்டு உட்காருவ என்ற காலம் சென்று இன்று பெண்களும் கால் மேல் கால் போட்டு உட்காரலாம் என்ற நிலை வந்துவிட்டது. கால் மேல் கால் போட்டு உட்காருவது அவளின் அடக்கத்தை குறிப்பது இல்லை. அவள் அவ்வாறு உட்காருவதால் அவளின் கர்ப்பப்பை சுருங்குகிறது என்ற காரணத்தாலேயே, பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்கார கூடாது என்று சொல்லி வைத்தார்கள். 

நம் முன்னோர்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. இதை கடைப்பிடித்து வந்தால் உங்களின் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும்.

Share:

No comments:

Post a Comment

Popular

Search This Blog

Powered by Blogger.

வளரும் நாடு (Valarum Naadu)

             அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார். இந்தியா வளரும் நாடு அல்ல, வளர்ந்த நாடு என்று பட்டயம் தருகிறார். இன்னும் பல நாடுகளில் இருந்த...

ads

ads

music to my visitors

Recent Posts

Pages