மன அழுத்தம் (Stress-Mana Azhutham)

மன அழுத்தம் என்பது பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இன்றைய காலத்தில் மன அழுத்தம் இல்லாத ஆட்களே இல்லை. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மன அழுத்தம் சற்று அதிகமாக  இருக்கும் என்பது மருத்துவர்களின் கருத்து. மனதளவிலும், உடலளவிலும் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்களே.
 மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த மருந்து விளையாட்டு. சிறு பிள்ளைகளுக்கு மன அழுத்தம் என்றால் என்னவென்றே தெரியாது. ஏனென்றால் அவர்கள் அதிகமாக விளையாடுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஓடி ஆடி விளையாடும் விளையாட்டுகள் குறைந்துவிட்ட காரணத்தால் அவர்களுக்கும் கூட மன அழுத்தம் ஏற்படுகிறது.கைபேசியிலும், கணினியிலுமே அதிக நேரம் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். இது கண்டிப்பாக மன அழுத்தத்தை அதிகப்படுத்திடுமே தவிர குறைக்காது. இந்த வயதில் நான் என்ன விளையாடுவது என்று சலிப்புடன் சிலர் சொல்வதுண்டு. உடல்நிலைக்கும், வயதிற்கும் தகுந்தாற் போல் அனைத்து விளையாட்டுகளும் உள்ளது. ஓடி ஆடி விளையாட முடியாதவர்கள் உட்கார்ந்து விளையாடலாமே. உட்கார்ந்து என்றால் கைபேசியிலோ, கணினியிலோ அல்ல. வாரம் ஒரு முறையாவது விளையாடுவதற்கென்று நேரம் ஒதுக்குங்கள். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் விளையாட்டில் பங்கு கொள்ளுங்கள். பிறகு உங்கள் மனதின் மாறுதல்களை நீங்களே உணர்வீர்கள். மன அழுத்தம் மெல்ல குறையும். 
         வற்புறுத்தி யாரையும் எந்த காரியத்தையும் செய்யச் சொல்லாதீர்கள். அதுவே ஒரு மன அழுத்தம் தான். உதாரணமாக படிப்பு. பிள்ளைகளுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதை படிக்க விடாமல் அதை படி இதை படி இந்த பிரிவு எடுத்துக்கொள் என்று ஆளுக்கொன்று சொல்வார்களே தவிர உனக்கு எதில் இஷ்டம் என்று கேட்பது சிலரே. இப்படி தின்னிக்கப்படும் பொது தான் அவர்கள் தடுமாறுகிறார்கள்.
       சில பெண்களுக்கு உடலுறவின் போது ஏற்படும் அதிக வழியால் மன அழுத்தம் அதிகரிக்கும். அதன் வெளிப்பாடாக அவர்கள் அசாதாரணமாக நடந்துகொள்வார்கள். பார்ப்பவர்கள், இவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது, பேய் பிடித்துவிட்டது என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஊராரின் பேச்சை கேட்பதை நிறுத்திவிட்டு மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லதைத் தரும்.
       சாதாரண முடி உதிர்தலிருந்து உயிரைக் கொள்ளும் புற்று நோய் வரை மன அழுத்தம் உண்டாக்குகிறது. மருத்துவரிடம் சென்றால் தூக்க மாத்திரை தான் தருவார்கள். மூளை ஓய்வு எடுப்பதற்காக. எந்த மருந்து மாத்திரையும் இல்லாமல் நமக்கு நாமே வைத்தியம் செய்யலாம். 
        தியானம் செய்வது ஒரு சிறந்த வைத்தியம். இரவு தூங்கும் முன் ஐந்து நிமிடம் தியானம் செய்துவிட்டு படுங்கள். மனம் விட்டு பேசுங்கள். மனம் விட்டு பேசினால் மட்டுமே எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும். குழந்தைகளுடன் பேசி விளையாடுங்கள். வேலையை பகிர்ந்து கொள்ளுங்கள். வீட்டு பிரச்சனையை அலுவலகத்திலும், அலுவலக பிரச்சனையைவீட்டிலும் காட்டுவதை நிறுத்திவிடுங்கள். இப்படி நாம் செய்யும் சிறு சிறு விஷயங்களைக் கொண்டு மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
             **********************************************************************************       

Share:

No comments:

Post a Comment

Popular

Search This Blog

Powered by Blogger.

வளரும் நாடு (Valarum Naadu)

             அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார். இந்தியா வளரும் நாடு அல்ல, வளர்ந்த நாடு என்று பட்டயம் தருகிறார். இன்னும் பல நாடுகளில் இருந்த...

ads

ads

music to my visitors

Recent Posts

Pages