விழிப்புணர்வு (Vizhipunarvu)

      பெண்ணுரிமை, பெண்சுதந்திரம் பற்றி வெறும் வாயால் பேசிக்கொண்டே இருக்கலாம். உரிமையும், சுதந்திரமும் அதிகமாக அதிகமாக அவர்களின் பாதுகாப்பு என்பது குறைந்து கொண்டே தான் வருகிறது. "இன்றைய சமுதாயத்தல் பெண்களின் நிலை"  என்ற புத்தகத்தில் பெண்களின் இன்றைய நிலையைப் பற்றி அழகாக விளக்கியுள்ளார் "விக்னா பாக்கியநாதன்" . ஆண்களுக்கு நிகராக இன்று பெண்களும் அனைத்து துறைகளிலும் பணிபுரிகிறார்கள். இருந்தாலும் அவர்களின் விழிப்புணர்வு பற்றி பேசும் பொது இன்னும் அடிமட்டத்தில் தான் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். பெண்  பிள்ளைகள் படித்து என்ன செய்ய போகிறது என்ற எண்ணம் பல இடங்களில் பல பேருக்கும் இருக்கிறது. அதனால் தான் அவர்களின் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருமணம்  செய்துவைத்து வேறு வீட்டிற்கு அனுப்பிவிடுகிறார்கள். 18 வயதுக்கு கீழ் உள்ள ஒரு பெண்ணிற்கு திருமணம் செய்யக்கூடாது என்கிறது சட்டம். ஆனால் சட்ட விரோதமாகத்தான் பல விஷயங்களும் நடந்துக்கொண்டிருக்கின்றன. பெண்கள் என்னதான் முன்னேறி வருகிறார்கள் என்று சொன்னாலும், அறிவிலும், விழிப்புணர்வில் பின் தங்கி தான் இருக்கிறார்கள் என்பதற்கு நான் கண்ட சிலவற்றை கூறுகிறேன்.
     நானும் என் அம்மாவும் தெரிந்த ஒருவரிடம் வீட்டு வேலைக்கு ஆள் தேவை என்று தெரிவிக்கச் சென்றோம். அவர் கணவனை இழந்த 55 வயது பெண். அவருக்கு இரு மகள்கள். மூத்த மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். இளைய பெண் எங்கே எனக்கேட்டோம். அவள் இங்கு தான் இருக்கிறாள் என்றார். பள்ளிக்கு செல்லவில்லையா என கேட்டோம். பத்தாம் வகுப்பு வரை படித்தால். படித்தது போதும் என்று நிறுத்திவிட்டேன் என்றார் அப்பெண்ணின் அம்மா. ஏன் இப்படி? அவளை பள்ளிக்கு அனுப்புங்கள் என சொன்னதுக்கு அந்த அம்மா சொன்ன பதில், உன்னைப்போல் என் மகளும் ஒல்லியாக இருந்தால் பரவலையம்மா. இவள் கொஞ்சம் வாட்ட சாட்டமா இருக்கா அதனால் வெளியில் அனுப்புவதற்கு பயமாக உள்ளது என்று அவர்கள் சொன்னவற்றில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற பயமே மேலோங்கி நின்றாலும், விழிப்புணர்வு போதவில்லை என்றே சொல்லலாம். என் பார்வையில் அவர்களின் முட்டாள்தனமே தெரிந்தது
     சமீபத்தில் வெளியான தகவல், ஒரு இளைஞன் facebook என்று சொல்லப்படும் முகநூலில் 20 பெண்களை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியுள்ளான். ஒரு பெண்ணிடம் எப்படியெல்லாம் பேசினால் அவள் சிக்கிவிடுவாள் என்பதை அந்த இளைஞன் நன்றாக புரிந்துவைத்திருக்கிறான். இப்படிப்பட்ட பெண்களை படித்த முட்டாள்கள் என்று சொல்வதா? அவர்களின் அறியாமை என்று சொல்வதா? "privacy" என்ற பெயரில் இவர்கள் செய்யும் அக்கப்போர் அப்பப்பா.....ஒரு பெண்ணின் தனிப்பட்ட விஷயங்களை பார்ப்பது என்பது தவறான ஒன்றே. ஆனால் தன்னை பெற்றெடுத்த தாய், தந்தையிடம் அனைத்தையும் சொல்லலாமே. 
     இது போன்ற ஏமாற்று வேலைகள் தான் இன்று அதிகமாக நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக காதல் என்ற பெயரில் தான் . இரண்டு நாட்களுக்கு முன்பாக கூட ஒரு ஆண் தனக்கு திருமணமானதை மறைத்து வேறொரு பெண்ணை ஏமாற்றி யாருக்கும் தெரியாமல் திருமணமும் செய்துகொண்டு கடைசியில் அப்பெண்ணை கொன்றுவிட்டார். இது போன்று எத்தனையோ சம்பவங்கள் பெண்களை ஏமாற்றிக்கொண்டு தான் இருக்கிறது  இச்சமுதாயம். பாதுகாப்பு அற்ற நாட்டில் முதலிடமாக இந்தியா தான் இருக்கிறது என்பது வருத்தத்திற்குரிய செய்தி. வயது வரம்பின்றி பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு பெண் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன் கண்மூடித்தனமாக எதையும் நம்பாமல், அதைப்பற்றி பல முறை யோசித்தும், முழுமையாக தெரிந்துக்கொண்டும் செயல்படுவது நல்லது. 

                    *விழித்துக்கொள் உன்னை சுற்றி நடப்பவைகளைப் பார்த்து*.
      
     
Share:

No comments:

Post a Comment

Popular

Search This Blog

Powered by Blogger.

வளரும் நாடு (Valarum Naadu)

             அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார். இந்தியா வளரும் நாடு அல்ல, வளர்ந்த நாடு என்று பட்டயம் தருகிறார். இன்னும் பல நாடுகளில் இருந்த...

ads

ads

music to my visitors

Recent Posts

Pages