நட்பு (Natpu)

                                                "நல்லினத்தாரோடு நட்டல்" 
       நற்குணமுடையவரோடு நட்பு செய்ய வேண்டும். நம் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தால் அவர் நல்லவர். மறுத்தால் கேட்டவர் என்ற எண்ணமே பலரின் மனதிலும். சேர்ந்து பேசி சிரித்து, பாடிப் பழகி, சுமைகளைப் பகிர்ந்து கொண்டு, சோர்வடையும் போது உற்சாகப்படுத்தி, சின்ன சின்ன சாதனைகளையும் பாராட்டி, நம் தவறுகளைத் தயங்காமல் சொல்லி, வாழ்க்கைப் பயணத்தில் நமக்கு துணையாய் நம்மோடு நடந்து வருபவர்கள் தான் நல்ல நண்பர்கள். இன்றைய நட்பு இப்படி தான் இருக்கிறதா? இல்லை. நண்பர்களால் தான் முன்னேறினான் என்ற சொன்ன காலமெல்லாம் சென்று விட்டது. இன்றோ.....இவனை கெடுப்பதே இவனுடைய நண்பர்கள் தான். நண்பர்களால் தான் கெட்டுப்போகிறான் என்று ஒவ்வொரு வீட்டிலும் புலம்பல்கள் தான். 
                         " நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
                          மேற்செனறு இடித்தற் பொருட்டு".  
                                  (குறள் )

ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்குமாம், என்றார் திருவள்ளுவர். 
       நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் தேவை. நட்பு வளர்ந்த பிறகு முன்பு தெரியாத விஷயங்கள் தெரிய வரலாம். பிடிக்காத சில விஷயங்கள் நம் பார்வைக்கு தென்படலாம். பிடித்ததை ஏற்று, பிடிக்காததை வெளிப்படையாக சொல்வதில் தவறில்லை. நீ செய்வது தவறு, இதை மாற்றிக்கொள், இதை தவிர்த்துவிடு என்று இதமாய் சொல்லி புரியவைத்து நட்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமே தவிர, நட்பே வேண்டாம் என முறித்துக்கொண்டு போவது மூடத்தனம். சிலர் நட்பு என்ற பெயரில் புகைப்பிடிப்பவர்களையும், மது அருந்துபவர்களையும், தீய பழக்கத்திற்கு தன்னையும் வழி நடத்துபவர்களையுமே தனது சிறந்த நண்பர்கள் என்று சொல்லித்திரிகிறார்கள். நண்பன் என்பவன், தான்  சரியான பாதையில் செல்லாதபோது அதனை எடுத்துரைத்து நல்வழிக்கு திருப்புபவனே சிறந்த நண்பன். 
        அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சில மருத்துவர்கள் பல்லாண்டுகள் நடந்த ஆய்விற்கு பின் ஒரு அறிக்கையை அறிவித்தார்கள். ரத்தத்தில் உள்ள சர்க்கரை, அழுத்தம், கொழுப்பு, போன்றவை எல்லாம் நல்ல நட்புகள் உள்ளோருக்கு சரியான அளவிலும், நட்புகள் இல்லாதோருக்கு ஆபத்தான அளவுக்கு மிகுந்தும் இருப்பதைத் தாங்கள் கண்டதாக சொன்னார்கள். எனவே, நல்ல நட்புகளை கவனமாய் வளர்க்க வேண்டும். 
நம் நட்புகளுக்கும் நேரம் ஒதுக்குவோம்.  
       உலகத்தில் சிறந்த விஷயம் எதுவென்றால் மற்றவர்களுக்கு நன்றி செலுத்துவது தான். நட்பில் ஒருவருக்கொருவர் உதவி செய்து, நன்றி சொல்லும் போது, நமக்குள் எதற்கு நன்றி ? என்று கேட்பார்கள். தவறு செய்யும் போது மன்னிப்பு கேட்கிறோம். அது போல தான் நன்றியும். நட்பாக இருந்தாலும் நன்றி சொல்லி பழக வேண்டும். இன்று....எல்லா உறவுகளிலும் மன்னிப்பு என்ற வார்த்தையே கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது, நட்பிலும் கூட. உங்கள் நண்பர்களோடு மனந்திறந்து வெளிப்படையாய் பேசும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். தவறு என்று உன் மனதிற்கு தோன்றினால் மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள். நன்றி சொல்லவும் யோசிக்காதீர்கள்.  மன்னிப்பு கேட்கவும் தெரியணும். கொடுக்கவும்  தெரியணும்.
       "நண்பர்களால் விளையும் காயங்களை மணலில் எழுத வேண்டும்.மன்னிப்பு எனும் காற்று வீசி அவற்றை அழித்து விடும். நண்பர்கள் நமக்கு செய்யும் நன்மைகளை பாறையில் எழுத வேண்டும். எந்தக் காற்றும், புயலும் அவற்றை அழித்து விடாமல்."  
           
                            ********நட்பை வளர்ப்போம்*******
        
Share:

No comments:

Post a Comment

Popular

Search This Blog

Powered by Blogger.

வளரும் நாடு (Valarum Naadu)

             அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார். இந்தியா வளரும் நாடு அல்ல, வளர்ந்த நாடு என்று பட்டயம் தருகிறார். இன்னும் பல நாடுகளில் இருந்த...

ads

ads

music to my visitors

Recent Posts

Pages