உடலும் உடையும் (Udalum Udaium)

          உடலும் உடையும் என்று சொன்னாலே பெண்களுக்கான உடையைப் பற்றி தான். நடந்தால் குத்தம், நிமிர்ந்தால் குத்தம், குனிந்தாள் குத்தம் என்று ஏற்கனவே பல குத்தங்கள் பெண்களை பற்றி. அதிலும் ஆடை என்பது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது பெண்களுக்கு. அதிலும்  இந்த கிராமப்புறங்களில் அப்பப்பா.....சொல்லவே வேண்டியதில்லை. 
         ஒரு நாள் அவசர வேலையாக சீறி சிங்காரித்து சுடிதார் அணிந்துக்கொண்டு துப்பட்டாவை படத்தில் உள்ளது போல் போட்டுக்கொண்டு சென்றேன். வழியில் இரண்டு பாட்டி அவர்களின் வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டு என்னை அழைத்தார்கள். என்ன என்று கேட்டேன். "உனக்கு அண்ணன், தம்பி இருக்கிறார்களா?" என்று கேட்டார்கள். இருக்கிறான் என்றேன். துப்பட்டாவை இப்படி அணிந்துகொண்டு போனால் சகோதரனுக்கு ஆகாது , வேறு மாதிரி போட்டுச்செல் என்கிறார்கள். சட்டென்று எரிச்சலும், கோபமும் வந்தது. எரிச்சலோடு சரி என்று வந்துவிட்டேன். இருந்தாலும் பெரியவர்கள் சொன்னால் எதாவது காரணம் இருக்கும் என்று அதைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வம் கொண்டேன். அவர்கள் சொன்ன மாதிரி எந்த காரணமும் இல்லை.  சிலரின் வாய்க்கு வேலை இல்லை என்றால் ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பார்கள் போல. வடிவேல் சொல்வது போல், ரூம் போட்டு யோசிப்பாங்களோ...............????????
        பெண்கள் துப்பட்டா அணிவதற்கு காரணம், சூரிய ஒளியின் தாக்கம் அவர்களின் மார்பகங்களை பாதிக்க கூடாது என்பதற்காக தான். இது பல பெண்களுக்கே தெரியாத ஒன்று. பெண்ணின் முக்கியமான மூன்று உறுப்புகள்,  மார்பகம், பிறப்புறுப்பு, கருப்பை. இவை மூன்றும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான உறுப்புகள். இவை மூன்றையும் பாதுகாக்க கூடிய சிறந்த ஆடை சேலை தான். சேலையின் கொசவம் அதாவது வயிற்றுப்பகுதியில் மடக்கி சொருகுவார்கள். அது பிறப்புறுப்பு, கருப்பை இரண்டையும் பாதுகாக்கும். அதற்காக தான் நம் கொள்ளுப்பாட்டி காலத்தில் 32 கொசவங்கள் வைத்து சேலை கட்டினார்கள். அது படிப்படியாக குறைந்து இப்போது 3, 4 கொசவங்கள் தான் வைத்து சேலை காட்டுகிறார்கள். இது எப்படி நமது உறுப்பை சூரி ஒளியிலிருந்து காக்கும்?. அதே போல் தான் மாராப்பு என்பது மார்பகங்களை பாதுகாக்க. துப்பட்டாவை இப்படி தான் அணியவேண்டும், அப்படி தான் அணியவேண்டும் என்றெல்லாம் கணக்கில்லை. நம் மார்பகங்களில் வெப்பம் அதிகம் படாமல் பாதுகாத்தால் போதும். அனால்.....இன்றோ அதை ஒரு கவர்ச்சி பொருளாகவும், காட்சி பொருளாகவுமே பார்க்கிறார்கள் பெண்களும் கூட. 
        சில சமயம் மலம் கழிக்கும் போது கூட கருப்பை பாதிப்படியும் என்று சொல்கிறார்கள். சூரியன் கிழக்கு, மேற்காக தோன்றி மறைகிறது அல்லவா. கிழக்கு, மேற்காக உட்கார்ந்து மலம் கழிக்க கூடாது. நேரடியாக சூரிய ஒளி கருப்பையை தாக்கும். அப்படி தாக்கினால், அவர்களுக்கு அடிக்கடி கருப்பை பிரட்சணை வந்துக்கொண்டே இருக்கும். வீட்டின் கழிவறைகள் கூட கிழக்கு, மேற்காக கட்டமாட்டார்கள். அப்படி காட்டினாள் அது தவறானது. ஆண்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லையா என்று நினைத்தால் அவர்களுக்கு தான் கர்ப்பப்பை இல்லையே. ஒருவேளை ஆண்குறி பாதிக்கப்படுமோ....??????
                                                       ******வாழ்க வளமுடன்*******

     

        
Share:

No comments:

Post a Comment

Popular

Search This Blog

Powered by Blogger.

வளரும் நாடு (Valarum Naadu)

             அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார். இந்தியா வளரும் நாடு அல்ல, வளர்ந்த நாடு என்று பட்டயம் தருகிறார். இன்னும் பல நாடுகளில் இருந்த...

ads

ads

music to my visitors

Recent Posts

Pages